15 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாரையூர்

                                                                 - மேனாட்டும்
தேரையூர்ச் செங்கதிர்போல் செம்மணிகள் நின்றிலங்கு
நாரையூர் மேவு நடுநிலையே -

ஆகாய வீதியில் சிவந்த கதிரவன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஊர்ந்து செல்கிறான்.
செங்கதிரவன் போல் சிவந்த மணிகள் பொருந்தி ஒளிரும் திருநாரையூரிலே வீற்றிருக்கும்
சிவபெரூமானே உன்னை வணங்குகிறேன்.

இவ்வூர் சிதம்பரத்தின் தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது.இவ்விடத்தில் துர்வாசர் தவம் செய்துகொண்டிருந்தார். காந்தருவன் ஒருவன் அவர் தவத்திற்கு இடையூறு செய்தான். கோபமடைந்த
முனிவர் அவனை நாரையாகச் சாபமிட்டார். நாரையாகி அவன் வழிபட்ட தலம் ஆதலின் நாரையூர்.
இது நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம். இங்கு பொல்லாப் பிள்ளையார் சிறப்பு. அவர் அருளால்
தான் சிதம்பரத்தில் இருந்த தேவாரப் பாடல்களை நம்பியாண்டார் நம்பிகள் வெளிக்கொணர முடிந்தது.
சம்பந்தர் மூன்று, அப்பர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளனர்.

இறைவன் : செளந்தரேஸ்வரர்
இறைவி    : திரிபுரசுந்தரியம்மை
தலமரம்     : புன்னாகம்
தீர்த்தம்     : காருண்ய தீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment