20 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோடிகா

                                      - அஞ்சுகங்கள்
நாடிக்கா வுள்ளே நமச்சிவாயம் புகலும்
கோடிக்கா மேவும் குளிர் மதியே -

குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போல் அருள் பொழியும் சிவபெருமான் கோயில் 
கொண்டுள்ள திருக்கோடிக்காவிலுள்ள சோலைகளில் வாழும் கிளிகள் கூட நமச்சிவாய
என மிழற்றும் பெருமை வாய்ந்தது.

இவ்வூர் திருவிடை மருதூருக்கு கிழக்கில் உள்ளது.இப்பொழுது திருக்கோடிக்காவல் என்று 
பெயர். கண்ணமங்கலம் எனவும் வழங்குகிறது.
 அப்பர் பதிகங்கள் மூன்று இத்தலத்திற்குரியது.

இறைவன்  : கோடிகா ஈஸ்வரர்
இறைவி     : வடிவாம்பிகை அம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


No comments:

Post a Comment