8 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்குறுக்கை வீரட்டம்

                                          -- மணஞ்சேர்ந்து
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்குறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - 

நறுமணம் வீசும் கச்சு அணிந்த உமையம்மையுடன் திருக்குறுக்கையில்
கோயில் கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் சிவபெருமானே.
__
தற்காலத்தில் 'கொருக்கை' எனப்படுகிறது. மயிலாடு துறையிலிருந்து 12 கி.மீ.தொலைவில்
உள்ளது. இறைவன் எண்வகை வீரச் செயல்களைப் புரிந்த இடங்கள் அட்ட வீரட்டத்தலங்கள் எனப்படும். அவற்றுள் ஒன்று இத்தலம்.இங்கு சிவபெருமான் காமனை எரித்தார். இதை நினைவு
படுத்தும் வகையில் கூத்தப்பெருமானின் மன்றம் அமைந்துள்ளது.

யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்ற பெயர்கள் உள்ளன. காமதகன விழா மாசி
மகத்தன்று நடைபெறுகிறது.

இறைவன் : வீரட்டேஸ்வரர்
இறைவி    : ஞானாம்பிகை
தலமரம்     : கடுக்காய்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment