1 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புறம் பயம்

                                                         - முன்னம்பு
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம் வாழ் என்னுயிரே -

முன்னொரு காலத்தில் (அம்புமால்) ஊழிவெள்ளமாகிய நீர்ப்பெருக்கு (புறம்பியலா) இவ்வூர் எல்லையைத் தாண்டி நிற்கும் என அருள் செய்ய இப்பெயர் பெற்றது. இவ்வூரில் வாழும் என்
உயிரனைய சிவமே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் கும்பகோணத்திற்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்யாணமாநகர், புன்னாகவனம் என்பது வேறு பெயர்கள். பிரளயங் காத்த விநாயகர் சிறப்பு. ஆண்டுக்கு ஒரு முறை விநாயக சதுர்த்தியன்று மட்டும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இறைவன் : புன்னைவனநாதர்
இறைவி    : கரும்பன்ன சொல்லம்மை
தலமரம்     : புன்னை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

1 comment: