16 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பைஞ்ஞீலி

                                      -  மானைப்போல்
மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவுதிருப்
பைஞ்சீலி மேவும் பராபரமே -

மான்களின் கண்கள் அழகானவை. மருட்சி உடையவை.கருநீல நிறத்தோடு, வளைந்து மலர் போல் ஒளி நிறைந்தவை. அத்தகைய அழகுடைய விசாலமான கண்களுடைய அன்னை தழுவும் திருப்பைஞ்ஞீலிச் சிவனே உம்மை வணங்குகின்றேன் என்றவாறு.

இவ்வூர் திருச்சியிலிருந்து மண்ணச்ச நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. நீலி என்பது ஒரு வகை வாழை. இதை மனிதர் பயன்படுத்துவது இல்லை. இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு நீரில் விட்டு விடுவர்.
பசியால் வாடிய அப்பருக்குச் சிவன் அந்தணர் வடிவில் வந்து கட்டமுது தந்த இடம்.
இறைவன் : நீலகண்டேஸ்வரர்
இறைவி    : விசாலாட்சியம்மை
தலமரம்     : நீலி வாழை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment