12 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அன்பில் ஆலந்துறை

                                                               - நானூறு
கோலம் துறைகொண்ட கோவையருள் கோவைமகிழ்
ஆலந்  துறையின் அணிமுத்தே -

நானூறு அகப்பொருள் துறைகளைக் கொண்ட நூல் திருக்கோவையார். இந்த நூலை ஒரு அரசனாய்
(கோவாய்) மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட அன்பில் ஆலந்துறையின் அழகிய முத்தே சிவபெருமானே.

அன்புடையார் இல்லம் அன்பில். திருக்கோவையார் மாணிக்க வாசகர் அருளியது. அது நானூறு அகத்துறைகளை உடையது. இதனை மாணிக்கவாசகர் சொல்ல இறைவர் எழுதினார் என்பர்.

ஊர்ப்பெயர் அன்பில்.கோயிலின் பெயர் ஆலந்துறை. திருச்சியிலிருந்தும் லால்குடியிலிருந்தும்
செல்லலாம். பிரமன், வாகீச முனிவர் வழிபட்டதலம்.

இறைவன் : சத்தியவாகேஸ்வரர், ஆலந்துறைநாதர்
இறைவி    : செளந்தரநாயகி
தலமரம்     : ஆலமரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment