13 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமாந்துறை

                                          - நீலங்கொள்
தேந்துறையில் அன்னமகிழ் சேக்கை பலநிலவு
மாந்துறைவாழ்  மாணிக்க மாமலையே -

நீர் நிலைகளில் நீலநிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்தக் கருங்குவளை மலர்களில் தேன் நிறைந்து மணம் பரப்புகிறது. அன்னப்பறவைகள் மகிழ்வுடன் அமர்ந்து கொள்ளும் தாமரைமலர்கள்
பலவும் காணப்படுகிற திருமாந்துறை எனும் ஊர். இங்கே மாணிக்கமலை போல் வீற்று ஒளிமழை
பொழியும் சிவபெருமானை வணங்குகிறேன்.

இவ்வூர் லால்குடிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. வடகரை மாந்துறை என்று வழங்கப்
படுகிறது.

இறைவன் : ஆம்ரவனேஸ்வரர்
இறைவி    : அழகம்மை
தலமரம்     : மா

திருவருட்பிரகாசவள்ளலார்  :  விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment