7 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெய்த்தானம்

                                          - பொய்யாற்றி
மெய்த்தான   நின்றோர்  வெளித்தான மேவுதிரு
நெய்த்தானத்  துள்ளமர்ந்த நித்தியமே -

சொல்லிலும் செயலிலும் பொய்யர்களாய் நடப்பார்கள். நல்லொழுக்கம் உள்ளவரைப் போல் நடித்து
ஏமாற்றுவார்கள். அவர்களது வஞ்சத்தை, அனைவரும் அறியும்படி செய்யும்  திருநெய்த்தானம் என்ற பதியில் வீற்றிருக்கும் என்றும் உள்ள பொருளாம் சிவமே உம்மை வணங்குகிறேன்.

இத்தலம் மக்களால் தில்லை ஸ்தானம் என வழங்கப்படுகிறது. திருவையாற்றுக்கு 3 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. சப்தஸ்தானங்களில் ஒன்று.சரஸ்வதி, காமதேனு, கெளதம முனிவர் ஆகியோர்
வழிபட்டதலம்.

இறைவன்: நெய்யாடியப்பர்
இறைவி   : பாலாம்பிகை
தீர்த்தம்    : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment