2 June 2013

திருவருட்பா -- சிவத்தலங்கள்

திருவிசயமங்கை

                                                 -மாற்கருவின்
கண்விசைய மங்கைக் கனிபோல் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே -

ஆன்மாக்கள்  மீண்டும் மீண்டும் கருவிலே உருவாகிப் பிறக்கும். வருந்தும். இவ்வாறு பிறவாமல் இருக்க
தொண்டர்கள் விசயமங்கையில் கோயில் கொண்டிருக்கும் குருநாதனாம் சிவபெருமானிடம் சென்று வேண்டி வழிபடுவர். உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அவர்களது எண்ணம் நிறைவேறுவது திண்ணம்.
விசையமங்கை- விசய மங்கலம். மங்கலம் என்பது மங்கை என மருவி வழங்கும்.

இப்பதி புறம்பயத்துக்கு மேற்கில் 4 கி. மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : விஜயநாதர்
இறைவி    : மங்களாம்பிகை
தீர்த்தம்     : அர்ச்சுன தீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment