29 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

 உறையூர்  திருமுக்கீச்சரம்

                                                    - சிற்சுகத்தார்
பிற்சநநம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச்
சற்சனர்சேர் முக்கீச் சரத்து அணியே -

ஞானத்தினால் சுகம் அடைந்த நல்லவர்களுக்குப் பிறப்பில்லாத பெருவாழ்வு அளிக்கும்  சிவபெருமான்
திருமுக்கீச்சரத்துக் கோயிலில் எழுந்தருளி அழகு செய்கிறார். (சிற்சுகமாம் ஞானசுகம் அடைந்தவர்க்கு பிற்சனனம் இல்லை)

திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி உறையூர். இதுதான் முக்கீச்சுரம் எனப்படுகிறது. உதங்க முனிவருக்கு
 இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி கொடுத்த தலம். எனவே இறைவனுக்குப்
 பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர்.
இறைவன் : பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி    : காந்திமதியம்மை
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment