17 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாச்சில் ஆச்சிராமம்

                                           - எஞ்ஞான்றும்
ஏச்சிரா மங்கலத்தோடு இன்பம் தரும்பாச்சி
லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே -

எக்காலத்திலும் (ஏச்சு இரா) எவராலும் குற்றம் சொல்லுதற்கு இடமே இல்லாமல் மங்கலத்துடன்
இன்பமும் தரும் இடம் பாச்சிலாச்சிராமம். இவ்விடத்தில் நின்று அருள்பாலிக்கும் சிவபெருமானின்
திருவடிகளுக்கு வந்தனங்கள்.

திருவாசி என்றழைக்கப்படும் இவ்வூர் திருச்சி- சேலம் சாலையில் உள்ளது. இங்கு  கொல்லி மழவன்
மகளுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் முடக்கு நோய் நீக்கத் திருப்பதிகம் பாடினார் ஞானசம்பந்தர்.

இறைவன் : மாற்றறிவரதர்
இறைவி    : பாலசெளந்தரி
தலமரம்     : வள்ளி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment