26 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடம்பந்துறை

                                   - கோட்போக்கி
நில்லும் கடம்ப நெறிபோல் எனப்பூவை
சொல்லும் கடம்பந் துறைநிறைவே -

கோணலற்ற தூண்போல் நேர்ப்பாதையிலே செல்லுங்கள் என மரங்களில் வாழும் மைனாப் பறவைகள்
கூறும் திருக்கடம்பந்துறை ஈசனே, பக்தர்கள்  உள்ளத்தில் திருப்தி என்ற நிறைவை அளிப்பவனே உனக்கு நமஸ்காரம்.

குளித்தலை, குழித்தலை, கடம்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது.
காலைக்கடம்பர், மதியச்சொக்கர், அந்தி ஈங்கோய் என்று சோமாஸ்கந்த வடிவில் அமைந்த மூன்று திருத்தலங்களை ஒரே நாளில் வழிபடுவது சிறப்பு.

இறைவன் : கடம்பவனநாதேஸ்வரர்
இறைவி    : முற்றிலா முலையாள்
தலமரம்     : கடம்பு

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment