9 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமழபாடி

                                                           -   விரும்பிநிதம்
பொன்னும் கெளத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
மன்னு மழபாடி வச்சிரமே -

விருப்பத்துடன் தினமும் பொன்னாடையும், கெளத்துவ மணிமாலையும் அணிந்த திருமால்
வழிபடும் திருமழபாடியில் வீற்றிருக்கும் வைரத்தூண் போன்ற பெருமானே, உம்மை வணங்கு
கிறேன். (உறுதியான மரத்தை வச்சிரம் பாய்ந்த மரம் என்பர். வச்சிரம்- மரத்தின் காழ். மூங்கில்,
வாழை, பப்பாளி இவையெல்லாம் வச்சிரம் இல்லாத மரங்கள்.  மன உறுதி இருப்பவர்கள் வச்சிரம்
பாய்ந்த மரம் போன்றவர்கள். இல்லாதவர்கள் பொத்தல் மரமொப்பர். வச்சிரத்தை வைரம் என்பர்.)

இவ்வூர் திருவையாற்றுக்கு வடமேற்கில் கொள்ளிடத்தின் மேலைக்கரையில் 6 கி.மீ. தொலைவில்
உள்ளது. இத்தலத்தில் கொள்ளிடம் வடக்கு முகமாகப் பாய்கிறது.
''பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே யுன்னையல்லால் இனியாரை நினைக்கேனே'' சுந்தரர் தேவாரம்
இறைவன் : வஜ்ரத்தம்பேஸ்வரர்
இறைவி    : அழகாம்பிகை
தீர்த்தம்     : கொள்ளிடம்
தலமரம்    : பனை
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment