8 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

பெரும்புலியூர்

                                                                         - மைத்த 
கரும்புலியூர்க் காளையொடும்  கண்ணோட்டம் கொள்ளும் 
பெரும்புலியூர்  வாழ்கருணைப் பேறே -

அமாவாசை இருட்டு என்பார்களே அதுபோல இருண்ட இரவு நேரம்.அந்த இரவில் தன் காதலியைத் தேடி வந்தவன் எதிரே ஒரு புலி தோன்றுகிறது. இரவில் அதுவும் கருமையாய்த் தோன்ற அதன் மேல்
அவன் ஏறிக் கொண்டு கொள்ளிடக் கரையை அடைந்தான். அவன் புலிக்கு இரையாகாதபடி பெரும்
புலியூரில் வாழும் கருணைத் தெய்வமாம் சிவபெருமான் காப்பாற்றினார்.

இது திருப்பெரும்புலியூர். ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று. தில்லை ஸ்தானத்திலிருந்து
4 கிலோ மீட்டத் தூரத்தில் உள்ளது. 

இறைவன் : வியாக்கிரபுரீஸ்வரர்
இறைவி    : சவுந்தர நாயகி
தீர்த்தம்     : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment