25 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சோழ நாட்டுக்  காவிரி தென்கரைத் தலங்கள்

திருவாட்போக்கி

                                                 - ஓங்காது
நாட்போக்கி நிற்கும் நவையுடையார் நாடரிதாம்
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே -

பெருமையுடைய செயல்களைச் செய்யாமல் வாழ்நாளை வீணாகப் பொழுதுபோக்கிக் கழிக்கும் குற்றமுடையவர்கள் இறைவனை வழிபட மாட்டார்கள். திருவாட்போக்கி என்னும் தலத்தில்
வீற்றிருக்கின்ற வள்ளலே அவர்களுக்கும் அருள்புரிவாய்.

இவ்வூர் ஐயர் மலை, இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை என்றெல்லாம் வழங்குகிறது. மணப்
பாறையிலிருந்து குளித்தலை போகும் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோயில் மலை
மேல் உள்ளது.1140 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

இறைவன்: ரத்தினகிரீசுரர்
இறைவி   : கரும்பார்குழலம்மை
தீர்த்தம்    : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment