6 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவையாறு

                                                       -  பண்பகன்ற
வெய்யாற்றி  னின்றவரை மெய்யாற்றி  னேற்றுதிரு
ஐயாற்றின்   மேவியஎன்  ஆதரவே -

நற்பண்புகள் இல்லாத தீயவர்களை  நல்வழிப்படுத்தி  உயர்த்துவதற்காக திருவையாற்றில்  கோயில் கொண்டு துணை இருக்கும் சிவமே! உமக்கு நமஸ்காரம்.

தஞ்சாவூரிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. அப்பர் பெருமான்
கயிலைக் காட்சியைக் கண்டு களித்த தலம். மரகத, ஸ்படிக லிங்கங்களுக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.

இறைவன் : பஞ்சநாதேஸ்வரர், ஐயாற்றீசர்
இறைவி    : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 


No comments:

Post a Comment