3 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவைகாவூர்

                                                                - மண்ணுலகில்
வைகாவூர் நம்பொருட்டால் வைகியதென்று அன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே.

இதுவரை இந்த பூமியிலே தோன்றாத ஊர் நமக்காக நாம் கடைத்தேறும் பொருட்டுத் தோன்றியுள்ளது!
நாம் சென்று மனித வாழ்க்கைக்கு முதல்வனாய் விளங்கும் சிவபெருமானை தொழுது உய்வோம் என
அன்புடையவர்கள் வந்து வணங்கும் திருவைகாவூர் சிவனே உன்னை வணங்குகிறேன்.

வாழ்முதல் - வாழ்வுக்கு முதற் பொருளாக இருப்பவன். 'போற்றி என் வாழ்முதலாகிய பொருளே' எனத் தொடங்குகிறது  மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில்  அருளிய திருப்பள்ளிஎழுச்சி.
முற்காலத்தில் இதன் பெயர் 'வைகா' என்பதாகும். வில்வவனம், திருவைகா என்ற பெயர்களும் உண்டு.
நந்தி ஈஸ்வரனைப் பார்த்துக் கொண்டிராமல் கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் சிவராத்திரி சிறப்பு. வேடன் ஒருவனைப் புலி துரத்த, பயந்த அவன் வில்வமரத்தில் ஏறி
அமர்ந்து கொண்டான். உறங்காமல் இருக்க வில்வ இலைகளைப் பிய்த்து ஒவ்வொன்றாகக் கீழே
போட்டான். அன்று சிவராத்திரி நாள். மறுநாள் காலையில் இறைவன் வேடனுக்கு அருள் புரிந்தார்.
சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர்.
இறைவன்  : விக்னேஸ்வரர்
இறைவி     : வளைக்கையம்மை
தலமரம்      : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment