27 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பராய்த்துறை

                                 - மல்ல லொடு
வாழும் பராய்த்துறைவான் மன்னவரும் மற்றவரும்
சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலெ -

மிகுந்த செல்வத்தால்  வளம் பொருந்தி வாழும் மக்கள் இவ்வூர் அரசனையும், மற்றும் செலவந்தர்களையும்  போற்றித் துதிக்கிறார்கள். அதனால் பெருமையடைந்த மனனனும்
பிறரும் திருப்பராய்த் துறைச் செல்வமான சிவபெருமானை வணங்கிப் போற்றுகிறார்கள்.
பராய் மரங்கள் நிறைந்த நீர்த்துறையாதலால் பராய்த்துறை ஆயிற்று.

இவ்வூர் திருச்சி கரூர் சாலையில் உள்ளது. தாருகாவனம் எனவும் வழங்குகிறது. இந்திரன், குபேரன்
வழிபட்டதலம் என்பர்.
இறைவன் : பராய்த்துறை நாதேஸ்வரர்
இறைவி    :பொன் மயிலாம்பிகை அம்மை
தலமரம்    : பராய் மரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment