4 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவடகுரங்காடு துறை

                                         -  உய்யும் வகைக்
காத்தும் படைத்தும் கலைத்துநிற்போர் நாடோறும்
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே -

மனிதர்கள் வாழும் பொருட்டு முத்தொழிலும் செய்கின்ற பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் நாள்தோறும் வழிபாடு செய்கின்ற குரங்காடு துறைச் சிவனே, நீயே என்னுடைய நண்பனாவாய்.

ஆடுதுறை பெருமாள்கோயில் என வழங்கப்படும் இத்தலம் திருவையாற்றுக்குக் கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது.வடகுரங்காடுதுறையில் வாலியும், தென்குரங்காடு துறையில் சுக்ரீவனும்
வழிபட்டனர் என்பர்.
கர்ப்பிணிப்பெண் ஒருத்தி தாகத்தால் தவித்தபோது அவள்தாகத்தைத் தீர்க்கத்  தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்று பெயர்.
சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றுஇறைவன் பெயர் வழங்குகிறது. நடராஜர் சிவகாமியம்மையுடன்  சிலாவடிவில் காட்சியளிக்கிறார்.சம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : குலைவணங்கீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்
இறைவி    : அழகுசடைமுடியம்மை
தலமரம்     : தென்னை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
  

No comments:

Post a Comment