5 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழனம்

                                               - மாத்தழைத்த
வண்பழனத்  தின்குவிவெண்  வாயில்தேன்வாக்கியிட
உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே -

 தழைத்து வளர்ந்துள்ள மாமரங்கள், வளம் நிறைந்த வயல்வெளிகள், குவிந்து கிடக்கும் வெண்மையான மணல்! உயரமான மரங்களில் தேனீக்கள் கூடுகளை அமைத்திருக்கின்றன. கொம்புத்தேன் சிந்துகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பழனத்தில் கோயில் கொண்டிருப்பவர் என் உயிருக்கு உயிரான
சிவபெருமானாவார். அவரை வணங்குகிறேன்.

இத்தலம் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. கதலிவனம் என்றபெயரும் உண்டு. சந்திரன் வழிபட்டதலம்.

இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி    : பெரிய நாயகி அம்மை
தலமரம்     வாழை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment