30 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சிராப்பள்ளி

                                 - மற்செய்
அராப்பள்ளி மேவும் அவனின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி  ஞானத் தெளிவே -

கண்ணனாய்ப் பிறந்து மற்போர் செய்து, பாம்பணையில் கிடந்து அருள் புரியும் திருமால் வணங்கி வாழ்த்தும் சிவபெருமான், திருச்சிராப்பள்ளியில்  ஞானவடிவாய், தாயுமானவனாய் அருள்செய்கிறான்.

சிரா என்ற பெயருடைய முனிவர் பள்ளி அமைத்து வாழ்ந்த குன்று ஆதலால் 'சிராப்பள்ளிக் குன்று' என வழங்கலாயிற்று. அடிவாரத்தில் மாணிக்க விநாயகர். மலையின் நடுவே தாயுமானவர் திருக்கோயில்.மேலே 258 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயில்.

இறைவன் : தாயுமானேஸ்வரர்
இறைவி    : மட்டுவார் குழலி

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்று உங்களுக்காக.

நன்றுடையானைத்  தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக்  கூறஎன்னுள்ளங் குளிருமே.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

No comments:

Post a Comment