11 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானூர்

                                 - தேய்க்களங்கில்
வானூர் மதிபோல் மணியால் குமுதமலர்
கானூர் உயர்தங்கக் கட்டியே -

தேய்கின்ற களங்கம் உள்ள  நிலவின் ஒளியால் குமுதமலர்கள் இரவில் மலரும். ஆனால் திருக்கானூர் என்னும் இப்பதியில் கோயில் கொண்டிருக்கும் சொக்கத்தங்கமாகிய சிவனின் அருளால், தேயாத  குற்றமற்ற முத்துக்களின் ஒளி குமுதமலர்களை மலர்விக்கும் சிறப்புடையது.

தற்பொழுது இவ்வூர் இல்லை. ஒருசில குடியிருப்புகள் மட்டும் உள்ளனவாம். இவ்விடம் மணல்மேடு
எனப்படுகிறது. கொள்ளிடக்கரையில் கோயில் மட்டுமே உள்ளது.

இறைவன்: செம்மேனிநாதர்.
இறைவி   : சிவலோகநாயகி
தீர்த்தம்    : கொள்ளிடம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்    



No comments:

Post a Comment