14 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாற்றுறை

                                           - ஏந்தறிவாம்
நூற்றுறையில்  நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே -

உயர்வான நல்லறிவைத் தரும் நூல்களை ஓதும் நன்னெறியில் நிற்கும் பெரியோர்கள் என்ன செய்வார்கள்? தெய்விகச் சுடரொளியாய் திருப்பாற்றுரையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி
வணங்கி  மகிழ்வெய்துவார்கள். உயர்ந்த நூல்கள் எவை? திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், திருக்குறள், தேவாரம், திவ்யப்பிரபந்தம் முதலியன.

ஏந்தறிவாம்  நூற்றுறை - உயர்ந்த அறிவைத்தரும் கல்வி நூல் வகைகள்

திருப்பாத்துறை என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு மகப்பேறு இல்லாதவர்கள்  வந்து அம்பிகையை வழிபட்டுச் செல்கின்றனர்.

இறைவன் : ஆதிமூலேஸ்வரர்
இறைவி    : மேகலாம்பிகை
 தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment