26 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பனந்தாள்

                                          - தரும
மனம்தாள்  மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளில் பாலுகந்த பாகே -

அறம் செய்ய விரும்பும் நல்லவர்கள்  தங்கள் மனதை இறைவன் திருமலரடியில் சமர்ப்பணம்
செய்வர். அத்தகையோர் வாழும் திருப்பனந்தாள் என்னும் பதியில் பாகுபோல் இனிக்கும்  பரம்
பொருளாம்  சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
இவ்வூர்த்  திருக்கோயிலை தாடகையீச்சரம் எனத் திருப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன.
பனைமரம் தலமரம். அதனால் பனந்தாள் எனப்பட்டது. சம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : தாலவனேஸ்வரர், அருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர்.
இறைவி    : பிருகந்நாயகி, தாலவனேஸ்வரி
தலமரம்     : பனை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்







2 comments:

  1. Nice photo of the temple found in Flickr http://www.flickr.com/photos/chithiram-pesuthadi/8549331944/in/photostream/

    I have heard about all these temples in and around Kumbakonam from my grand mother.

    ReplyDelete
  2. Thank you S.J. I am reading about these temples only now and realise how much I have missed.

    ReplyDelete