30 December 2012

74. திருவருட்பா -சிவநேச வெண்பா


       கண்ணப்பன்  ஏத்துநுதற்  கண்ணப்ப  மெய்ஞ்ஞான

       விண்ணப்ப   நின்தனக்கோர்  விண்ணப்பம் - மண்ணில்சில

       வானவரைப்  போற்றும்  மதத்தோர்  பலருண்டு

       நானவரைச்  சேராமல்  நாட்டு.


       பொன்னின்  றொளிரும்  புரிசடையோய்  நின்னையன்றிப்

       பின்னொன்   றறியேன்   பிழைநோக்கி - என்னை

       அடித்தாலும்  நீயே  அணைத்தாலும்   நீயே

       பிடித்தேனுன்  பொற்பாதப் பேறு.

               

                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment