11 December 2012

55.வெள்ளைத் தாமரை


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளை யின்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;

உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத் துட்பொருளாவாள்.




No comments:

Post a Comment