25 December 2012

69. கடல் ஞாலம் - நம்மாழ்வார்

                 


            கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் ஆவேனும்  யானே  என்னும்

            கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

            கடல்  ஞாலம் உண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலத்து ஈசன்  வந்தேறக் கொலோ?

            கடல்  ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?

            கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே. 

No comments:

Post a Comment