22 December 2012

66. திருவருட்பா -வள்ளலார்


ஓடு  கின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடு  கின்றன ஒவ்வொறு நாளாய்

வீடு  கின்றன என்செய்வோம் இனிஅவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

மார்க் கண்டேயர் தம் மாண்பறிந்திலையோ

நாடு கின்றவர் நாதன் தன்   நாமம்

நமச்சிவாயம் காண் நாம்பெறும் துணையே. 

                    ........................

நமச்சிவாயத்தைத்  துணையாக்கிக்  கொண்டால் காலன் அணுக மாட்டான்.


        திருச்சிற்றம்பலம். 

No comments:

Post a Comment