21 December 2012

65. நமோ நம ஓம் சக்தி

   செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

        சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

  கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

        கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

  தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்

       துணையென்று நின் அருளைத் தொடரச் செய்தே

   நல்லவழி  சேர்ப்பித்துக்  காக்க வேண்டும்

      'நமோ நம ஓம் சக்தி' என நவிலாய் நெஞ்சே!


                                                           -   பாரதியார்.

No comments:

Post a Comment