13 December 2012

57. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி.

போர் புரிந்து மதுகைடர் தமையழித்தான் உளத்தொளியே

பார் அனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே

பாரகத்தார்  விழைந்தேத்தும்   சீர்    சீலப்   பெருந்தாயே

கார் வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.


திங்கள் ஒளித் திருமுகத்தில் பொங்கும் அருள் பொழிபவளே

இங்கு கலை வாணியுடன்  இந்திராணி  அம்பிகையாம்

மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி

செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

No comments:

Post a Comment