8 December 2012

52. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

[பலவகை வாசனைப் பொருட்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இது பொன் போன்ற நிறமுடையது. சிறிது பொன்னும் சேர்க்கப்பட்டு  இது   திருமஞ்சனத்திற்காக    உபயோகிக்கப்படுகிறது.]

சூடகம்  தோள்வளை  ஆர்ப்ப  ஆர்ப்பத்
தொண்டர்  குழாம் எழுந்து  ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்கு
ஆடகம் மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: கைவளையும், தோள்வளையும் ஒலிக்க,தொண்டர் கூட்டம் ஆரவாரம் செய்கிறது.    உலகமக்கள் இவையெல்லாம் பயன்படாத வேலை என ஏளனம் செய்ய, அவர்கள் அறிவீனர்கள்
என நாம் ஓலமிடுகிறோம். தன் மெல்லிய திருவடிகளில் பாடகம் அணிந்திருக்கும் பார்வதி தேவியின் மணாளனும், பெரிய பொன் மலை போன்ற பரம் பொருளுமாகிய சிவனாரைப் போற்றிப் பாடி ஆடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment