12 December 2012

56. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி


வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்

சிந்துமொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது.

மந்திரங்கள் வாய் மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்

செந்திருக்கண் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்.


எழுந்தருள்வாய் வெங்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழை மார்பா எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் கோவிந்தா, வேங்கடவா எழுந்தருள்வாய்.



No comments:

Post a Comment