6 December 2012

50. திருவாசகம் -திருச்சாழல்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை

ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

                        பொருள்

பூசுவது வெண்ணீறு. அணிவது சீறுகிற பாம்பு. பேசுவது வேதம்.

தெய்வம் எனும் பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா?

ஈசன் தானே இயற்கையாகவும், அதில் உள்ள உயிர்கள்

அனைத்துமாகவும் இலங்குகின்றான்.அவனது இயல்பே

இப்படி மூன்று விதங்களில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

                  திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment