10 December 2012

54. திருவாசகம்

             குயிற்பத்து

தேன் பழம் சோலை பயிலும் சிறுகுயிலே இதுகேள் நீ

வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட் கொண்ட வள்ளல்

ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்

மான் பழித்து ஆண்டமென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்.

பொருள்:  சோலைச் சிறுகுயிலே, வானுலகை விட்டு, பூமிக்கு வந்து, மனிதர்கள் உடல் உணர்வை விடுமாறு செய்து, அவர்களுடைய  உள்ளம் புகுந்து, உணர்வு மயமாகி ஆட் கொள்ளும் பார்வதி மணாளனை இங்கு வரும்படிக் கூவுவாய்.

          திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment