29 December 2012

73. ஶ்ரீ ரமண ஜெயந்தி.

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே.

பிராணன் ஒடுங்கில் பிரக்ஞை ஒடுங்கும் என்போன் பாதம் வாழ்கவே;
பிராணா  யாமம்  சாதனம் என்னும் பெரியோன் பாதம் வாழ்கவே.

பெண் ஆண் பேதம் போக்கிடு என்று பகர்வோன் பாதம் வாழ்கவே;
பிறருக்கு ஈவது தமக்காம் என்னும் பெருமான் பாதம் வாழ்கவே.

குற்றம் செயினும் குணமாக் கொள்ளும் குரவன் பாதம் வாழ்கவே;
அணியார் அருணா சலத்தில் வாழும் அமலன் பாதம் வாழ்கவே.

திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.

                         -- ஶ்ரீ ரமண பாத மாலை, ஶ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை.

                            திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment