9 December 2012

53. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

முத்து அணி கொங்கைகள் ஆட ஆட

மொய்  குழல்  வண்டு இனம் ஆட ஆடச்

சித்தம் சிவனொடும் ஆட ஆடச்

செம் கயல் கண் பனி ஆட ஆடப்

பித்து எம்பிரானொடும் ஆட ஆடப்

பிறவி பிறரொடும் ஆட ஆட

அத்தன் கருணையொடு ஆட ஆட

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: முத்துமாலைகள் அணிந்திருக்கும் முலைகள் குலுங்க,  அடர்ந்த  கூந்தலில் வண்டுகள் திரண்டிருக்க, மனமானது சிவபெருமானிடம் லயித்திருக்க, சிவந்த கெண்டை மீன் போன்ற கண்களில் நீர் அரும்ப, நான் என் இறைவனிடம் பித்துக் கொள்ள,பக்தர் அல்லாதார் பிறவிப் பிணியில் அழுந்திக் கிடக்க, என் தந்தை சிவபெருமான் யாண்டும் கருணையோடு கூடியிருக்க, அவன் நீராடுதற்கு  நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment