14 December 2012

58. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

தொலைவிடத்தும்  பலவிடத்தும் சுழன்றுதிரி ஏழ் முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியாவந்தனம் முடித்து

நிலைபெறுநின்  புகழ்சொல்லி   நின்பாதம்  சேவிக்க

மலையடைந்து காத்துளர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்.


ஆங்கந்த பிரம்மாவும் ஆறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகளந்த உயர்கதைகள் பாடுகின்றார்

ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்

தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய். 

No comments:

Post a Comment