20 December 2012

64.நாச்சியார் திருமொழி

                    கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

                      திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

                    மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

                       விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.


                    செங்கமல நாண்மலர்மேல்  தேன் நுகரும் அன்னம்போல்

                         செங்கண் கருமேனி வாசுதேவனுடைய

                    அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும்

                         சங்கரையா! உன்செல்வம் சாலவழகிதே.

No comments:

Post a Comment