26 December 2012

70. திருவாய்மொழி--நம்மாழ்வார்.

       என்னுள்  கலந்தவன்  செங்கனிவாய் செங்கமலம்

       மின்னும்  சுடர்மலைக்குக்  கண்பாதம் கைகமலம்

       மன்னுமுழு வேழுலகும் வயிற்றினுள்

       தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே.


       பலபலவே  ஆபரணம்  பேரும் பலபலவே

       பலபலவே  சோதிவடிவு  பண்பெண்ணில்

       பலபல கண்டுண்டு  கேட்டுற்று மோந்தின்பம்

       பலபலவே ஞானமும்  பாம்பணை மேலாற்கேயோ!

No comments:

Post a Comment