18 December 2012

62. சரணாகதி


வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே

பூங்கமலத்  தளிர்க் கரத்தால் பொறுமை வளர் பூதேவி

ஓங்கியசீர் குணம் ஒளிரும் உயர்தனிப்பேர் தவத்தாயே

வேங்கடத்தான் திருத்தேவி நின்பாதம் சரண் புகுந்தோம்.



கருணைஎனும் திருக்கடலே  காத்தளிக்கப் படைத்தவனே

பெருந்தாயைப் பிரிந்தறியா பெரியோனே வல்லவனே

ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர் களையும்

திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்.
                              ------------
திருவேங்கடத்தான் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment