3 December 2012

47.திருவாசகம்

போற்றி ஓம் நமச்சிவாய                                

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புறம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி  போற்றி.

பொருள்:    ஓம் நமச்சிவாய என்னும் மந்திர வடிவானவனே. பாம்பை அணிந்திருப்பவனே. உலக வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கின்ற எனக்கு போக்கிடம் வேறில்லை. என்னைப் புறக்கணிக்காமல் எனக்கு  அருள் புரிவாய். உனக்கு வெற்றி உண்டாகுக.


                                                          திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment