15 December 2012

59.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

நல்கமுகு  தென்னைகளில் பாளைமணம் நெகிழ்ந்தனவால்

பல்வண்ண மொட்டுகள்தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்

புல்லரிக்கும்  மெல் ஈரப் பூந்தென்றல் தவழ்கிறதால்

எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்/


நின்  திருப்பேர் பலகேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயிற் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி

நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும்புகழை மிழற்றிடுமால்

நின்செவியால் துய்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

No comments:

Post a Comment