7 December 2012

51. திருவாசகம் - திருச்சாழல்

(சாழல் என்பது ஒருவகை மகளிர் விளையாட்டு.
தடையும் தடைக்கு ஏற்ற விடையும் பாடுவது  இதில் 
இடம் பெறுகிறது)

கோயில் சுடுகாடு  கொல்  புலித் தோல் நல் ஆடை


தாயும் இலி  தந்தை இலி  தான் தனியன் காண் ஏடி


தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும்


காயில் உலகு அனைத்தும் கல்பொடி காண் சாழலோ.

பொருள்: குடியிருப்பது சுடுகாட்டில். அணிவது புலித்தோல். தாய் தந்தை இல்லாதவன்.ஒற்றைஆள்!
இவனும் ஒரு தெய்வமா?
பிரபஞ்சம் அழியும் தன்மையுடையது என்பதைச் சுடுகாடு உணர்த்தும். ஆணவத்தை அழித்தற்கு அறிகுறி
கொல்புலித்தோல். அவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முழுமுதற்பொருள். ஆதலால் அவன் தனியன்.
உலகம் இருப்பதும் போவதும் அவன் சங்கல்பத்தைப் பொறுத்து இருக்கிறது.
நிலையற்ற உலகில் எதையும் சொந்தம் பாராட்டாதே என்ற கோட்பாட்டைத் தன் வடிவில் வைத்துள்ளான் சிவன்! 
                                       திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment