4 December 2012

48. திருவாசகம்

போற்றி என்போலும் பொய்யர்

தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்

போற்றி நின்பாதம் போற்றி

நாதனே போற்றி போற்றி

போற்றி நின் கருணை வெள்ளம்

புதுமது புவனம் நீர் தீ

காற்று இயமானன் வானம்

இருசுடர்க் கடவுளானே.

பொருள்: பொய்யான இந்த உடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்க்கு அருள் புரிவதால் நீ வள்ளல் ஆகிறாய்!  உன் கருணையோ புத்தம் புதிய தேனுக்கு ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள்,  சூரியன், சந்திரன், ஜீவாத்மா, ஆகிய எட்டு  மூர்த்திகளாய்  நீ  இருக்கின்றாய். உனக்கு  என் வந்தனங்கள்.

                                                திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment