9 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்காளத்தி
                                     - எள்ளலுறும்
கோளத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய்திருக்
காளத்தி ஞானக்  களஞ்சியமே -

இகழத்தக்க கொலை பாதகங்கள் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களால் செய்யப்படுகிற தீமைகளாம்.
இத்தீய உணர்வுகளை நீக்கிய நற்குணம் உடையவர்க்கு திருக்காளத்தியில் ஞானக் களஞ்சியமாய்
வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் செய்கிறான்.

சுவர்ணமுகி என்ற பொன்முகலியாற்றின் கரையில் உள்ள வாயுத்தலம். பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான இது தட்சிணகைலாசம் என வழங்கப்படுகிறது. ஶ்ரீ =சிலந்தி, காளம் =பாம்பு, ஹஸ்தி = யானை என்ற மூன்றும் வழிபட்டு முக்தி பெற்றதலம் எனவே ஶ்ரீ காளஹஸ்தி என்ற பெயர்.
கண்ணப்ப நாயனார் கண் கொடுத்து முக்தியடைந்த தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

No comments:

Post a Comment