17 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கச்சூர் ஆலக்கோயில்

                                           - தூவிமயில்
ஆடும் பொழிற்கச்சூர் ஆலக் கோயிற்குள் அன்பர்
நீடும் கனதூய நேயமே -

அழகிய சிறகை விரித்து ஆடுகின்ற மயில்கள் விளையாடும் சோலைகள் நிறைந்த ஊர் திருக்கச்சூர்.
தூய்மையான அன்புருவம் கொண்டு அன்பர்களின் அன்பு பெருகுகின்ற வண்ணம் இங்கே சிவபெருமான்
கோயில் கொண்டுள்ளான்.

சுந்தரர் இத்தலம் வந்தபோது பசியால் வருந்தினார். இறைவன் அந்தணர் வடிவம் கொண்டு அடியார்களிடம் உணவு பெற்று பசியாற்றிய தலம்.
சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment