8 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கள்ளில்
                                   -பண்பார்க்கும்
நள்ளிப் பதியே நலம்தரும் என்று அன்பர்புகும்
கள்ளில் பதிநம் கடப்பாடே -

ஆலயங்களில் இறைவனைப் பண்களால் பாடித் துதிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இறைவன்
விரும்பிக்கேட்கும் இசை ஒலி முழங்கும் தலமே நமக்கு நன்மைதரும் என அன்பர்கள் மகிழ்ந்து வாழும் திருக்கள்ளில் எனும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானே! கொடை வள்ளலே!

திருக்கள்ளம், திருக்கண்டலம் என வழங்கப்படும் இத்தலம் சென்னையில் இருந்து சுமார் 35 கி. மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment