16 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவான்மியூர்
                                                  - கார்திரண்டு
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே -

கார்மேகங்கள் ஒன்று திரண்டு சோலைகளிலுள்ள மரங்கள் மீது தாவிச் செல்லும் தலம் திருவான்மியூர்.
அங்கே தயாளகுணமே வடிவாய் வீற்றிருக்கிறான் மருந்தீசப் பெருமான்.

அகத்தியருக்கு மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்த அருளிய தலம். எனவே மருந்தீசர்.
இப்பதி மயிலாப்பூருக்குத் தெற்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திரு ஆல்மியூர் என்பது திருவான்மியூர் என மருவியது. இதன் பொருள் அழகிய ஆலமரத்தின் அருகே உள்ள ஊர் என்பதாகும்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment