25 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பருப்பதம்
                                - தாபமிலாப்
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
யோகியர்கள் ஓதிட வாழ் ஒப்புரவே -
சர்க்கரைப் பாகும், வெல்லப்பாகும் எத்தனை இனிப்பானவை! மகிழ்ச்சியளிப்பவை! இனிப்பாக
யாராலாவது பேச முடியுமா? அன்பும் கருணையும் நிறைந்த சொற்கள் இனிப்பானவை. அத்தகைய இனிய சொற்களைக் கூறும் மங்கை உமையம்மை.
உமையம்மையோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யோகியர்கள் போற்றிப்புகழ திருப்பருப்பதத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
இத்தலம் ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ச்சுனம் என்றும் சீசைலம் என்றும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment