5 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாசூர்
                                        - ஞாலம்சேர்
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே -

இவ்வுலக வாழ்வில் அச்சம் தரும் அனைத்தையும் நீக்கக்கூடிய நல்லறிவு உடையவர்கள் சூழ்ந்திருக்கும்
ஊர் திருப்பாசூர்.மேன்மைதரும் உயர் பொருளை உணர்த்துபவனாக சிவபெருமான் இங்கே வீற்றிருக்கிறார்.

இவ்வூர் திருவள்ளூருக்கு வடமேற்கில் உள்ளது. சிவபெருமான் மூங்கிலடியில் தோன்றியருளிய தலம்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:

Post a Comment